Tuesday, December 20, 2011

வடபகுதி மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட திட்டங்களாம்.

மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களிலேயே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது மருத்துவ ஆலோசனை நடமாடும் மருத்துவ முகாம், கண் சிகிச்சை, மற்றும் முகாம்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, புளியங்குளம் பிரதேசத்தில் வைத்திய முகாம் ஒன்றும் வைத்திய ஆலோசனை செயல்த்திட்டம் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் இவை நடைபெற்றன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இந்த சுகாதார சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தொண்டர் அமைப்புக்களும் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளன.

No comments:

Post a Comment