Friday, December 30, 2011

செல்லிட தொலைபேசி பாவனையால் புற்றுநோய் பரவுகின்றது.

செல்லிட தொலைபேசிகளை வரையறையின்றி பயன்படுத்துவது, புற்றுநோய் பரவுவதற்கான பிரதான காரணமென, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிந்திய அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார். 15 நிமிடங்களுக்குள் பிறப்பு சான்றிதழ்கள் உட்பட ஏனைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், பொலநறுவை மாவட்ட செயலகத்தி;ல் ஏற்படுத்தப்பட்ட விசேட பிரிவை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்த கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment