Wednesday, December 28, 2011

முதலாம் திகதி தொடக்கம் தென்னிலங்கை கடுகதி வீதியில், பிரயாணிகள் பஸ் சேவை.

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பிரயாணிகள் பஸ் சேவையை ஆரமபிப்பதற்கான, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிக்கிறது. பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தருவிக்கப்பட்ட இரண்டு பஸ் வண்டிகள், முதல் கட்டத்தின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிக்கிறது. அத்துடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சபையூடாக, இரு தனியார் பஸ் வண்டிகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள, திட்டமிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை கடுகதி வீதியில் வாகனம் செலுத்தும் வேக வரையறை உள்ளிட்ட ஏனைய சட்ட ஒழுங்குகளுக்கமைய, இப்பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக, சாரதிகளையும் அறிவுறுத்த, நடவடிககைகள் எடுக்கப்பட்டன.

No comments:

Post a Comment