Wednesday, December 21, 2011

சம்பந்தன் குழுவினர் தமிழினத்திற்கு மாத்திரமல்ல நாட்டுக்கே துரோகிகள்-சம்பிக்க ரணவக்க!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் தீர்விற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதிகாரப்பகிர்வின் மூலமாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் போவதில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் குழுவினர் தமிழினத்திற்கு மாத்திரமல்ல நாட்டுக்கே துரோகிகளாவர். கடந்த காலத்தில் இவர்கள் இந்தியாவுடன் இணைந்து இலங்கைத் தமிழர்களை அழித்தனர். தற்போது மேற்குலகத்துடன் இணைந்துகொண்டு எஞ்சியுள்ள தமிழர்களையும் அழிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment