Monday, December 5, 2011

ஐ.தே.க தலைமையை ஏற்குமாறு கருவுக்குஅழைப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு எதிர்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தியோகபூர்மாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கட்சியின் யாப்பிற்கிணங்க எதிர்காலத்தில் இடம்பெறும் தலைமைத்துவ தேர்தலில் கட்சியின் தலைமை பதவிக்குப் போட்டியிடுமாறு ரஞ்சித் மத்தும பண்டார, கரு ஜயசூரியவிடம் கோரிக்கை முன்வைத்திருந்துள்ளார்.

No comments:

Post a Comment