Sunday, December 18, 2011

90 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது

90 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முயன்றவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இலங்கைப் பிரஜையான சந்தேக நபர் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ 350 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் சந்தேக நபரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment