Friday, December 30, 2011

மார்ச் 31 இல் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும கரைதுறைபற்று பிரதேச சபைகளுக்கான வாக்கெடுப்பு, எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவிருந்தது. எனினும், அவ்வுள்ளுராட்சி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில், நிலக்கண்ணிவெடிகளை அகற்றி, மீள்குடியமர்த்தும் பணிகள் பூர்த்தியாகாமையினால், வாக்கெடுப்பை அன்றைய தினம் நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக அப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையும், வாக்கெடுப்புக்கு தடையாக உள்ளது. இவ்விடயங்களை கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பை ஒத்திவைக்க, தீர்மானிக்கப்பட்டது. குறித்த உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு போட்டியிடும் சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தலைவர்களுக்கு, இது தொடர்பாக அறிவுறுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment