Tuesday, December 6, 2011

கொழும்பு காசல் வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகள்.

பிள்ளைகள் என்பது ஒரு பெரும் செல்வமாகும். ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த 3 குழந்தைகளும் கொழும்பு காசல் வைத்தியசாலையில் பிறந்துள்ளன. இங்கிரிய ஊருகலயை சேர்ந்த டி உதேஷா கல்ஹாரி 3 குழந்தைகளுக்கு தாயானார். இயற்கையினால் வழங்கப்பட்ட இந்த கொடையை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட போதிலும் இதனை ஏற்பதற்கான பொருளாதார வசதி அவரிடம் காணப்படவில்லை. நாட்டிற்கு சுமையாக இல்லாமல் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு தாயும் தந்தையும் சகோதர மக்களிடம் நிவாரணம் கோரியுள்ளனர். இவர்களுக்கு உதவி விரும்வோர் இல 15 ஊருகல இங்கிரிய என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்க முடியும். அக்குழந்தைகளை ஈண்டெடுத்த தாயுக்கும் தந்தைக்கும் அது பேர் உதவியாக அமையும்.

No comments:

Post a Comment