Wednesday, December 7, 2011

28 நாட்களாக கடலில் சிக்கி தத்தளித்த 5 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 8ம் திகதி இவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றவர்கள் அந்தமான் கடலில் சூறாவளியில் சிக்கிய இந்த வள்ளம் நீண்டதூரம் அடித்து செல்லப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு வானொலித் தகவல்கள் மூலம் அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு எவ்வித பலனும் கிட்டவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற நிபொன் வெளி என்ற வள்ளம் இந்த வள்ளத்தை கண்டுள்ளது. பின்னர் இந்த வள்ளம் கரைக்கு இழுத்து வரப்பட்டது.

No comments:

Post a Comment