Sunday, December 18, 2011

மேலுமோர் அகதிகள் கப்பல் மூழ்கியது. 200 பலி!

இந்தோனேஷியாவின் முக்கிய தீவான ஜாவா அருகே மரக்கப்பல் கடலில் மூழ்கியது. இதில் 200 பேர் மூழ்கியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 33 பேர் மட்டுமே உயிருடன் கரை ஏறியுள்ளனர். படகின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடலில் மூழ்கியவர்கள் ஆப்கன், ஈராக், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்றனர் என தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment