Friday, December 16, 2011

யுத்தத்தினால் கை காலை இழந்த விஷேட தேவையுடையோர் 20 பேருக்கு பண உதவி

கிழக்கு மாகாண சர்வோதயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் கை காலை இழந்த விஷேட தேவையுடையோர் 20 பேருக்கு தலா 20ஆயிரம் ரூபா வீதம் காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று சர்வோதயத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் விஷேட தேவையுடையோர் 20பேருக்கு தலா 20ஆயிரம் ரூபா வீதம் காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மரமொன்றையும் நட்டி வைத்தார்.

செய்தி - ஏ.ஆர்.றஹ்மான்

No comments:

Post a Comment