Thursday, December 29, 2011

சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: 2 வது லெப்டினட் பலி! ஓருவர் காயம்.

கிளிநொச்சி - சங்குபிட்டி - பூநகரி பகுதியில் சற்று முன்னர் (இரவு 7.45 மணியளவில்) இராணுவச் சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 2ம் லெப்டினட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , கப்டன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முகாமிலிருந்து தப்பியோடிய சிப்பாய் ஒருவரை பிடிக்கச் சென்றபோதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 18வது கெமுனு படையணியைச் சேர்ந்த லாண்ஸ் கோப்ரல் சஞ்சீவ என்ற என்ற சிப்பாய் முகாமை விட்டு தப்பியோடியுள்ளார். இவரை கைது செய்வதற்காக சங்குப்பிட்டி பாலமருகில் விசேட சோதனைச் சாவடி ஒன்றை அமைத்து படையினர் தேடுதலில் ஈடுபட்டபோது, தேடுதலில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவரின் துப்பாக்கியை பறித்து அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே ஒருவர் மரணமானதுடன் ஒருவர் பாடுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் 2 வது லெப் பெலவத்த என தெரியவருகின்றது.

லாண்ஸ் கோப்ரல் சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment