Thursday, December 8, 2011

பிரித்தானியாவில் இலங்கையர் கொலை தொடர்பில் 19 வயது இளைஞன் கைது

பிரித்தானிய மேர்செசைட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையரான 30 வயதுடைய மகேஸ் விக்ரமசிங்க என்பவர் கடந்த 29ம் திகதி நியூஸ் இன் கிங்ஸ்வே வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது முகமுடி அணிந்த நபரால் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 19 வயதுடைய இளைஞன் நேற்று இரவு கைது செய்யப்பட்டு லிவர்பூல் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தனது குடும்பத்தை மேம்படுத்தவென கடந்த ஒரு வருட காலமாக பிரித்தானியாவில் குணபால வெல்ஹெனகமகே என்பவரது வர்த்தக நிலையத்தில் மகேஸ் விக்ரமசிங்க பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment