Saturday, December 17, 2011

காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி பாடசாலையின் 14வது விடுகை விழா

காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி பாடசாலையின் குழவிகளின் குவலயம் வருடாந்த 14வது விடுகைவிழா விபுலானந்த மணி மண்டபத்தில் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

மட்டு.இ.கி.மி தலைவர் சுவாமி ஞானமயானந்தா ஜீ, உதவி பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் , மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந், முன்னாள் உபதவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி, ஓய்வூதியர் சங்கத் தலைவர் வே.கிருஸ்ணபிள்ளை, நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் காரைதீவு காரியாலய பொறுப்பதிகாரி வி.விஜயசாந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பிப்பதையும், சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவைச்சேர்ந்த பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவிற்கு ஊர்மக்கள் சார்பாக சுவாமி பொன்னாடை போர்த்துவதையும் , பரிசு வழங்கலையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர்

No comments:

Post a Comment