Tuesday, November 15, 2011

இரசியப் பொலிஸார் எனக் கூறி கப்பம் பெற முயன்ற குழுவொன்று கைது.

மாத்தளை மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கப்பம் பெறும் குழு தொடர்பாக, விரிவான விசாரணைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளன. மாத்தளை இரத்தோட்டை வர்த்தகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாவை கப்பமாக பெற, இக்குழு திட்டமிட்டிருந்தது. இதில், 5 லட்சம் ரூபாவை முதலில் பெறுவதற்காக சென்ற போதே, இவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள், கைக்குண்டு மற்றும் முகமூடி தொகுதிகள் என்பனவும், கைப்பற்றப்பட்டதாக, மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாம் இரகசிய பொலிஸார் என தெரிவித்தே, வர்த்தகரை அச்சுறுத்தியுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment