Monday, November 7, 2011

சிறைச்சாலைகளில் போதைவஸ்த்து தட்டுப்பாடு

கொழும்பு உட்பட நகரப்பிரதேசங்களில் போதைப்பொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை அடுத்து சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளும் போதைப்பொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான போதைப்பிரியர்கள் தினமொன்றுக்கு 200 ரூபா முதல் 3000 ஆயிரம் ரூபா வரையிலான போதைப்பொருளை பாவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தமது வீடுகளில் உள்ளவர்கள் வழங்கும் சவர்க்காரக் கட்டிகளை கூட போதைப்பொருள் பாவிப்பதற்காக சிறைச்சாலையினுள் விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment