Tuesday, November 1, 2011

உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை மீள ஒட்டப்பட்டது.

கடந்த 30ம் திகதி உடைக்கப்பட்ட திருகோணமலை சிவன்கோயிலுக்கு அருகாமையிலிருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை இன்று திருத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இந்நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றது. நிகழ்வில் திருமலை மாநகர சபைத் தலைவர் , உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்திய லங்கார , 22ம் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராய்ச்சி கலந்து கொண்டனர்.

இச்சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து பல அரசியல் கட்சிகளும் தமது கண்டனத்தை வெளியிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments:

Post a Comment