Thursday, November 3, 2011

திருமலையில் ரயிலில் மோதுண்டு செவிப்புலனற்ற வாலிபன் பலி

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு 25 வயதுடைய கமல்ராஜ் என்ற செவிப்புலன் அற்ற இளைஞன் மரணமடைந்துள்ளார். அத்துடன் இவருடன் புகையிரதப்பாதையில் நடந்து வந்த மற்றொரு நபர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகேணமலை நகரை அன்மித்த பாலையுற்று- லிங்கநகர் சந்தி ஆகிய இரு பிரதேசங்களுக்கும் இடைப்பட்ட புகையிரதப்பாதையிலேயே இவ்விபத்து இன்று பகல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment