சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்புக் குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் இவ்வருடத்தில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென அமைச்சின் செயலாளர் சுனில் எஸ் சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும் விலையை அதிகரிக்கும்படி லாவ் கேஷ் நிறுவனம் தமது அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் லிட்ரோ கேஷ் நிறுவனம் விலை அதிகரிப்புக் கோரிக்கையை விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment