Thursday, November 3, 2011

இராணுவத்திலிருந்து தப்பியோடியோரை கைது செய்ய நடவடிக்கை

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

சுமார் ஆறுபதாயிரத்திற்கு மேற்பட்டோர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களில் 95 வீதமானோர் குற்றச்செயல்களுடன் தொடர்புபடவில்லை என்றும் அவர்களில் சிலர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்திற்கு சொந்தமான ஆயுதங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 475 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத இராணுவ வீர்ர்களை இராணுவத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment