Friday, November 4, 2011

அனோமா பொன்சேகா மீது வழக்கு தாக்கல் செய்ய ஆலோசனை

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா மீது வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறதுஆயுதக்கொள்வனவு மோசடி தொடர்பில் தேடப்பட்டு வந்த மருமகனான தனுன திலகரட்னவை வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக குற்றச்சாட்டிலேயே இவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அது தொடர்பான கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தனுன திலகரட்ன தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தமது அறிக்கையில் கூறியுள்ளனர்.

அதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு நவம்பர் 18ம் நாள் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment