Saturday, November 5, 2011

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர்

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறைக்கு முன்னதாக வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளார் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய மற்றும் பழைய பாடவிதானங்களுக்கு அமைய பெறுபேறுகள் இம்முறை வெளியிடப்படும் என்றும் உயர்தரப் பரீட்சையில் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வேறு அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 94 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் 9 ஆம் திகதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - எம். இஸட். ஷாஐஹான்

No comments:

Post a Comment