Wednesday, November 16, 2011

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை

முன்னாள் உலக அழகியும் இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பாய் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளதாக பீ.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது குழந்தை மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று அவரது மாமனார் அமிதாப்பாச்சன் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான் இருந்தது.

இதற்கு முன்னர் ஐஸ்வர்யாராய்க்கு இரட்டைக் குழந்தை பிறக்கவுள்ளதாகவும், 11.11.11 தினத்தன்று ஐஸ்வர்யா ராய் குழந்தையைப் பெற்றெடுப்பார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மும்பாய் செவன் ஹில்ஸ் மருத்துவ மனைக்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment