Saturday, November 5, 2011

துமிந்த சில்வா வெளிநாடு சென்றது சட்ட விரோதமானது. பாரதவின் மகள் ஹிருணிகா

அண்மையில் முல்லேரியாவில் இடமபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நிலையில் ஸ்ரீஜயவர்த்தன வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டமை சட்விரோதமானது என்று பாரதலக்ஷமன் பிறேமச்சந்திரனின் மகள் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குற்றவாளியும் முதலில் பொலிசாரினால் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர் சுகயீனமுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் இருக்கவேண்டுமானால் பொலிஸ் பாதுகாப்பிலேயே இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நீதவானின் அனுமதியுடனேயே வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு அது போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் ஹிருணிகா மேலும் தெரிவித்தார்.

ஹிருணிகா தற்போது வெளிநாடு சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

No comments:

Post a Comment