Tuesday, November 8, 2011

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு நாடளாவிய ரீதியில் வலைவிரிப்பு

போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்டு பிடிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான திட்டம் ஒன்றினை செயற்படுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்கள் காரணமாக பேதைப் பொருள் கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பும் பெறப்படுவதாகவும் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களுக்கான விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com