வாகனங்களை கொள்ளையடித்து, அவற்றின் உதிரிப்பாகங்களை விற்பனைசெய்து வந்த இரு வர்த்தகர்கள், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெலிவேரிய மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் பகுதிகளிலிருந்து திருடிய 4 வாகனங்கள், பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாகனங்களின் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்த 4 வர்த்தகர்களும், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். வாகனங்களின் உதிரிப்பாகங்கள், கொழும்பு, வத்தளை, பஞ்சிகாவத்த, நவகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பிரதேசங்களிலிருந்து கைப்பற்றப்பட்டதாக, வெலிவேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள், கம்பஹா மேலதிக மஜிஸ்திரேட் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி இந்திக்க அத்தநாயக்கவிடம் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள், கடவத்த மற்றும் தெல்கொட பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர். இவ்விருவரும், ஜப்பானில் வாகன உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் பிரிவொன்றில் சேவையாற்றிவிட்டு, இலங்கைக்கு வந்தவர்கள் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment