Saturday, November 12, 2011

புலிகளின் நிலையே ஜேவிபி க்கும். இருவேறு கார்த்திகை வீரர் தினக் கொண்டாட்டங்கள்

மக்கள் விடுதலை முன்னணி இரண்டாக பிளவுபட்டிருப்பது யாவரும் அறிந்ததே இதனை வெளிப்படுத்தும் வகையில் பல் வேறு சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. கட்சியின் இரு பிரிவினரும் தனித்தனியாக ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் மக்கள் விடுதலை முன்னணி தமது மரணமடைந்தஉறுப்பனர்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் நடத்துகின்ற கார்த்தகை வீர்ர் நினைவு தின நிகழ்வு (மகா வீரர்) இம் முறை இரண்டு பிரிவினராலும் இரு இடங்களில் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

இது மக்கள் விடுதலை முன்னணி இரண்டாக பிளவுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதுடன், இரு தரப்பினரினதும் பலத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்குள்ள படத்தில் சோமவங்ச அணியினர் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிலும், கிளர்ச்சி பிரிவினர் அதே தினம் கொழும்பு சுகததாச அரங்கிலும் நாளை 13 ஆம் திகதி நடத்தவுள்ள கார்த்தகை வீர்ர் நினைவு தின நிகழ்வு தொடர்பான சுவரொட்டிகள் ஒரே இடத்தில் ஒட்டப்பட்டிருப்பதை காணலாம்.

பிளவு பட்டுள்ள புலிகளின் வால்களும் இவ்வாறே பல்வேறு பிரிவுகளாக நின்று அவர்களின் பணம்பண்ணும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment