களனி பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே மோதல்: ஒருவர் வைத்தியசாலையில்
களனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இன்று காலை இடம் பெற்ற மோதலினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு மாணவர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞான பீடத்தின் மாணவர் மன்றத்திற்காக போட்டியிட்ட இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடன் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கிரிபத்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment