Wednesday, November 9, 2011

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை ஹெரணை பொலிசார் கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர் . சந்தேக நபர்கள் கடந்த மாதம் 4 ஆம் ,26 ஆம், 28 ஆம். திகதிகளில் ஹெரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. செல்லிடத் தொலைபேசி, மோட்டார் சைக்கிளொன்று, தங்க நகைகள், பணம்,உட்பட நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளனர் .

பொலிசாருக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளை அடுத்து விசாரணைகள் முன்னெடுத்த செல்லப்பட்ட போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com