இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதியும் மேற்கொள்ளாத பாரிய அபிவிருத்திப் பணிகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற திவிநெகும ஒருங்கிணைப்பு கிராமிய அபிவிருத்தி திணைக்களத்திற்குள் சமூர்த்தி உத்தியோகத்தர்களை உள்வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
பட்டிருப்பு தேசிய பாடசாலையில் வைபவம் இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்பாளர் திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன் தலைமையில் வைபவம் இடம்பெற்றது. மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித வேறகொட உட்பட அதிகாரிகள் பலரும், இதில் கலந்து கொண்டனர். சமூர்த்தி அதிகாரிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவது தொடர்பான விரிவான கருத்துரைகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment