Friday, November 4, 2011

மன்னாரில் 7 கிலோ 360 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது.

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்கரைப்பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 7 கிலோ 360 கிராம் நிறை கொண்ட கஞ்சாப்பொதியுடன் மன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்கரைப்பகுதியில் வைத்து குறித்த நபர் பொதி ஒன்றுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நட மாடியதை அவதானித்த கடற்படையினர் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பொதியை சோதனையிட்ட போது பொதியினுள் கஞ்சா போதைப் பொருள் காணப்பட்டுள்ளது.

குறித்த நபரையும் அவரிடமிருந்து மீட்ட 7.5 கிலோ கிராம் நிறைகொண்ட கஞ்சாவினையும் கடற்படையினர் இரவு 12.30 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த நபரை நேற்;று வியாழக்கிழமை மதியம் மன்னார் நீதவான் திருமதி. கே.ஜீவரானி முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் நீதவான் திருமதி.கே.ஜீவரானி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment