வாதுவையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் மோதலில் முடிவடைந்ததில் கைக்குண்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு 10.45 அளவில் தெல்துவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுரங்க பிரியதர்ஷன என்ற 28 வயது இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் கோனதுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 6 பேரில் இருவர் பாணந்துறை வைத்தியசாலையிலும் கோனதுவ வைத்தியசாலையில் ஒருவரும் நாகொட வைத்தியசாலையில் மூவருமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
நேற்றிரவு 10.45 அளவில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றதால் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.இந்த சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..
No comments:
Post a Comment