Wednesday, November 9, 2011

சிறைக்குள் விபசாரம்; 19 அழகிகள் கைது

மெக்சிகோவில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மிகவும் சொகுசாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள சிறைகளில் உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிறை அறைகளில் ஆண் கைதிகளுடன் விபசார அழகிகளும் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்கள் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒத்து ழைப்புடன் அங்கு வந்து விபசாரம் நடத்துவதும் தெரிய வந்தது. அங்கிருந்த 19 அழகிகளை கைது செய்தனர். இவை தவிர, சிறைகளில் கைதிகள் பொழுது போக்குக்காக அரசு அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த 100 அதிநவீன டெலிவிஷன்கள், மற்றும் “மரிஞ்ஜுனா” என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

மேலும் கைதிகளின் பொழுது போக்குக்காக சிறைக்குள் சேவல் சண்டை நடத்தப்படுகிறது. அதற்காக அங்கு கொண்டு வரப்பட்ட சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment