Saturday, November 5, 2011

இலங்கையில் 18 விமான நிறுவனங்கள் - பசில் ராஜபக்ஷ

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையினுள் 18 விமான நிறுவனங்கள் தமது தொழில்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அமைய நாட்டிற்கு வருகை தந்த நிறுவனங்கள் அல்ல எனவும், இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் சிறந்த நிலையில் காணப்படுவதே இதற்கான காரணம் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment