Monday, November 14, 2011

டெங்கு கய்ச்சலினால் 151 பேர் மரணம்

இந்த வருடம் முதல் 10 மாதகாலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 151 பேர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 21 ஆயிரத்து 913 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களில் 57-58 சதவீதத்தினர் மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் என்றும், கடந்த யூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ள போதிலும், தற்போது இடைக்கிடையே பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment