Friday, October 28, 2011

பொலிஸார் மற்றும் வாகனங்களுக்கு காயம் ஏற்படுத்தியோருக்கு விளக்கமறியல்

தெரிவித்து கடந்த மே மாதம் 29 ,30, ஆம் திகதிகளில் கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் காயம் ஏற்படுத்தியமை வாகனம்களுக்கும் கட்டிடம்களுக்கும் சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களை நீர்கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் எட்டு பேரில் சுதந்திர வர்த்தக வலய ஊளியர்களும் அடங்குவர்.

ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 29 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் (அதிகாரிகள் அடங்கலாக) காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் , வாகனம்களுக்கும் கட்டிடம்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்ற புலனாய்வு திணைக்களம் வழக்கின் குற்றப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment