Friday, October 21, 2011

கார்ல் மார்க்ஸின் புகைப்படத்தை கிளர்ச்சிக் குழு திருடிச் சென்றுள்ளது என்கிறார் ரில்வின் சில்வா

பொலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்திலிருந்த கார்ல் மார்க்ஸின் புகைப்படத்தையும் பெறுமதி மிக்க இறுவட்டுகளையும் ஜே.வி.பியின் கிளர்ச்சிக் குழு திருடிச் சென்றுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது தலைமையகத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கார்ல் மாக்ஸின் புகைப்படத்தை பிரேம் செய்வதற்காக கொண்டு சென்ற நபர் கிளர்ச்சிக் குழுவோடு இணைந்துள்ளார். இதனால் புகைப்படம் திருடப்பட்டு அக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு “நியமுவா “பத்திரிகையின் மாதிரி வடிவமைப்பையும் திருடிச் சென்றுள்ளனர்.கட்சியின் பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் அடங்கிய இறுவட்டுகளும் திருடப்பட்டுள்ளன. அத்தோடு கணனி மயப்படுத்தப்பட்ட தகவல்களும் திருடப்பட்டுள்ளன என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com