Friday, October 21, 2011

த.தே.கூ வின் திருட்டு மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்தும் தமிழ் மகன்.

அண்மையில் இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பருத்திதுறை பிரதேச சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரின் திருட்டு மின்சாரப்பாவனைக்கு அயல்வீட்டுக்கார தமிழன் ஒருவன் கட்டணம் செலுத்தவேண்டிய துர்பாக்கியநிலை தோன்றியுள்ளது.

பருத்திதுறை பிரதேசசபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள பூபாலசிங்கம் சஞ்ஜீவன் என்பவரே இவ்வாறன திருட்டு மின்பாவனையில் ஈடுபட்டுள்ளார். இம்மின்பாவனை பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன், சில சமயங்களில் மின்கசிவுகள் ஏற்படவும் ஏது நிலையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும், இதுவெல்லாம் சாதாரண விடயம் என அவர்கள் தெரிவித்தார்களாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் முறையிட்டு நீதி கிடைக்காத மக்கள் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டபோது சஞ்ஜீவன் நம்மட ஆள் என்று அவர்கள் சொன்னார்களாம்.

எவரிடமிருந்தும் நீதி கிடையாத அயலவர்கள் நிலைமையை படம்பிடித்து ஊடகங்களின் உதவியை நாடியுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை காக்கப்போகின்றோம் என அவர்களின் வாக்குளை பெறும் தமிழ் தேசியக் கூட்டமைபினர் அவர்களின் உடமைகள் சூறையாடும் விதங்களில் இதுவம் ஒன்று.






1 comments :

Anonymous ,  October 21, 2011 at 11:17 PM  

நோர்வேயில் வாழும் முன்னாள் புலிப்பினமியான சண்டியன் ஊத்தை சேது நோர்வேயில் மின்சாரம் திருடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நோர்வே அரசாங்கத்துடன் சேர்ந்து தற்போதைய சருகு புலிகளை மட்டுமல்ல சாதாரண தமிழர்களையும் ஊத்தை காட்டிக்கொடுப்ப்பதால் இந்த திருட்டுகளை அரசு கவனிப்பதில்லை என்று மக்கள் குமுறுகின்றார்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com