Sunday, October 23, 2011

மிலிந்த மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம் பெறுகின்றார்.

கொழும்பு மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் மிலிந்த மொரகொட ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் இரு வாரங்களில் இந்த நியமனம் வழங்கப்படும்.

கொழும்பு மாநகர சபையின் தேர்தலில் போட்டியிட முன் மிலிந்த மொரகொட ஜனாதிபதியின் ஆலோசகராகப் பதவி வகித்தார். தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் பதவி விலகியிருந்தார்.

மிலிந்த மொரகொட எதிர் காலத்தின்போது சர்வதேச நடவடிக்கை அல்லது நகர அபிவிருத்தி தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment