Monday, October 31, 2011

பதுளை பசறை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற கால நிலை காரணமாக பதுளை பசறை வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதுளை பசறை வீதியின் 2 மைல் கல் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக பதுளை பசறை வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பதுளை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையை தொடர்ந்து ஏற்பட்ட மண்ணரிப்பு காரணமாக மேட்டு நிலங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

பதுளை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து வீதியை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை நீடித்தால் நிலைமை மோசமடையலாமென அறிவிக்கப்படுகின்றது.

பதுளை பசறை வீதியில் பயணம் செய்யும் சாரதிகள் மின அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பதுளை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment