Monday, October 31, 2011

கொழும்பு மேயர் முஸம்மில் நாளை பதவியேற்பு

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கொழும்பு மாநகர சபை மேயராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஏ.ஜே.எம்.முஸம்மில் நாளை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். அத்துடன் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள டைடஸ் பெரேராவும் நாளை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு கொழும்பு நகர மண்டபத்தில் நாளை காலை 9.30 மணிக்கு விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட ஏ.ஜே.எம்.முஸம்மில் 50,000 ற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment