Sunday, October 30, 2011

பிரபாகரன் தப்பிச் செல்ல முற்பாட்டால் பிடித்துக் கொடுக்க அமெரிக்கா தயாராகவிருந்தது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் தலைவரும் அவரின் சகாக்களும் தப்பிச்செல்ல முற்பட்டால் அவர்களை கைது செய்வதற்கு தாம் உதவி செய்ய தயாராக இருப்பதாக அப்போது இலங்கைக்கு அமெரிக்கா உறுதி வழங்கியிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ரொபட் ஒ பிளேக்கினால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதென கொழும்பு ரெலி கிராப் தெரிவித்துள்ளது.

இதே வேளை அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்ட சகல புலிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாரானதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க தூதுவர் ரொபட் ஒ பிளேக்கிற்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் நடைபெற்ற முன்னைய சந்திப்பின் போதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் பொது மன்னிப்ப வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவித்தால் ஜே.வி.பி, மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் அதிருப்தி அடைய கூடும் என கோத்தபாய தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெது மன்னிப்ப குறித்த பகிரங்கமாக அறிவிக்கப்படாவிட்டால் அந்த முயற்ச்சியில் பயனிருக்காது என பிளேக் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தம் , பாதுகாப்பு வலயம் மற்றும் பொது மக்களை மீட்டல் தொடர்பில் பாதுகாப்பு செயலர் தகவல்களை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment