கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகனுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் சர்வதேச குற்றவியல் கோர்ட் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மொரினோ தெரிவித்துள்ளார். தற்போது மாலியில் உள்ள
பாலைவனப்பகுதியில், கடாபியின் மகன் சய்ப் அல் இஸ்லாம் கடாபி மறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சர்வதேச கோர்ட்டில் சரணடையும் பட்சத்தில் அவரிடம் நியாயமான விசாரணை நடைபெறும் என்றும் சர்வதேச கோர்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment