Monday, October 31, 2011

அரசாங்கத்தை வீழ்த்த இரகசிய நடவடிக்கை

படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர தொடர்பான சம்பவத்தை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மேலைத்தேய ஒற்றர் நிறுவனமொன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக “ரண்திவ” என்ற வார இறுதி சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த அரசியல் உறுப்பினர்களை பயன்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்தும் இரகசிய நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதான வர்த்தகர்கள் சிலர் முன்வந்துள்ளதுடன், இவர்கள் மூலமாக பிரதான புலளாய்வு பிரிவொன்று இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்துள்ளது.

லிபியாவை போன்றே இலங்கையின் நிலைமையும் காணப்படுவதாகவும், இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்பதே இந்த புலனாய்வு பிரிவின் நோக்கமாகும்.இதற்கு ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உதவி வருவதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment