Sunday, October 30, 2011

கொழும்பில் 350 ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகர்கள்

இலங்கையின் கொழும்பு நகரத்தில் மாத்திரம் 350 ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருப்பதாக தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, தற்போது இலங்கையில் 10 முதல் 15 வரையிலான ஹெரோயன் மொத்த விற்பனையாளர்கள், மாபியா என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர். கொழும்பு நகரத்தில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையாளர்களில் 45 பேர் ஹெரோய்ன் மொத்த வர்த்தகர்களாக செயற்பட்டு வருகின்றனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 300 பேர் ஹெரோய்னை 50 கிராம் மற்றும் 100 கிராம் என்ற அளவுகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களின்படி இலங்கைக்கு 90 வீதமான ஹெரோய்ன் பாகிஸ்தான் மற்றும் தென்னிந்தியா ஆகிய நாடுகளில் இருந்து எடுத்து வரப்படுகின்றன என்று ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
.

No comments:

Post a Comment