Monday, October 24, 2011

மகாத்மா காந்தி ஜீயின் 142 வது ஜனன தின விழா

மகாத்மா காந்தி ஜீயின் 142 வது ஜனன தின விழாவையொட்டி மலையக கலை கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் ஸ்தாபக தலைவர் ராஜாஜென் தலைமையில் நேற்று கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல துறைகளிலும் சேவையாற்றிய மும்மதத்தையும் சேர்ந்த 28 பேருக்கு அண்ணல் மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.அங்கு மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு சொர்ணம் முகாமையாளர் கோ.குணபாலச்சந்திரன் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.தௌபீக் ஆகியோர் மாலை அணிவிப்பதையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பொருளியலயளரும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் கௌரவ செயளாலருமான சுப்ரமணியம் புன்னிய சீலன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுவதையும் உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா விருது பெறுவதையும் விருதுபெற்றோரையும் படங்களில் காணலாம்.படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

No comments:

Post a Comment