Monday, September 19, 2011

சீனிக்களஞ்சியத்தை முற்றுகையிட்டார் மேர்வின் சில்வா

களனி பெத்தியாகொட பகுதியில் சுகாதாரமற்ற வகையில் காணப்பட்ட சீனிக் களஞ்சியசாலை ஒன்றுக்கு அமைச்சர் மேர்வின் சில்வா திடீரென சென்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். குறித்த களஞ்சியசாலையிலிருந்து களனி விற்பனை நிலையங்களுக்கு சுகாதாரமற்ற சீனி விநியோகிக்கப்படுவதாக இன்று காலை கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து உடனடியாக செயற்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேச சபை உறுப்பினர்களுடன் குறித்த களஞ்சியசாலைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.

அத்துடன் சுகாதார பரிசோதகர்கள் அவ்விடத்துக்கு வரவழைத்த அமைச்சர் சீனியினை பரிசோதனை செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com