Wednesday, September 21, 2011

பாதாள உலகத்தினரால் தொலையா உடன் அறிவியுங்கள். கோத்தபாய

பாதாள உலகத்தினர் மற்றும் கப்பம் பெறுவோர் தொடர்பாக உடனடியாக தகவல் தருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ கொழும்பு வர்த்தகர்களுக்கு அறிவித்துள்ளார். கொழும்பு வர்த்தகர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற் சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது சுதந்திரமான முறையில் தமது வியாபார நடவடிக்கைகளை தேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளமைக்கு வர்த்தகர்கள் பாதுகாப்புச் செயலாளருக்கு நன்றி தெரிவித்தனர்.

சந்திப்பின் போது கொழும்பு புறக்கோட்டை பிரதேச தமிழ் முஸ்லிம் வியாபாரிகள் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டதுடன் தமது பிரச்சனைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினர். பொருள் இறக்குமதி செய்யும் போது கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் கண்டேனருக்காக கப்பம் பெறுவோருக்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக் கூறப்பட்டது.

இது தொடர்பாக தகவல்களை திரட்டியவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வியாபார நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் பாதாள உலகத்தினர் ஒடுக்கபட வேண்டியவர்கள் எனவும் அங்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment