Monday, September 19, 2011

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஹாத்தின் பெண்கள் அணியினரின் வருடாந்த தேசிய மாநாடு

இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஹாத்தின் பெண்கள் அணியினரின் வருடாந்த மாநாடு சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் (17,18 ஆம் திகதிகளில்) நீர்கொழும்பு. பெரியமுல்லையில் உள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

இந்த தேசிய மாநாட்டில் (இஜ்திமா) இலங்கையின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஹாத்தின் பெண்களும் சிறுமியர்களும் பங்கு பற்றினர்.

ஜமாஹத்தின் தேசியத் தலைவி ரிஹானா தரீக்கின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பேச்சு, கட்டுரை, இஸ்லாமிய வினா-விடை, கஸீதா , கிராஅத் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சமய சொற்பொழிவுகளும் இடம் பெற்றன.
நிகழ்வில் 'அந் நிஸா ' என்ற சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த சஞ்சிகையையே படத்தில் காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment