Sunday, September 18, 2011

அமைதியின் புன்னகை நூல் வெளியீட்டு விழா........

மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நூலாசிரியர் முகில்வண்ணனின் அமைதியின் புன்னகை நூல் வெளியீட்டு விழா சமாதானம் அமைப்பின் அல்ஹாஜ் தேசகீர்த்தி முஹமட் முஸம்மில் காதர் தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. சமாதானம் அமைப்பின் வெளியீடான இந் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரி.ஜெயசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொணடார்.

சிறப்பு அதிதியாக தேசிய கல்விக் கல்லூரி உப பீடாதிபதி ரி.யுவனேஸ்வரி, இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் வளவாளர் ஏ.சொர்ணலிங்கம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் செல்வி நவரூபரஞ்சினி, எழுத்தாளர் ஹனிபா சிங்கள ஆங்கில எழுத்தாளர் குமாரி குமாரகே ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் நூலாசிரியர் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர;

செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்

No comments:

Post a Comment